தனிநபரின் சக்தியைக் காட்டுங்கள்: வசந்த் ரவி
வாக்களித்த பின் நடிகர் வசந்த் ரவி பேசியது குறித்து...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்துவிட்டு பேசிய நடிகர் வசந்த் ரவி ‘தனி நபரின் சக்தியைக் காட்டுங்கள்’ எனத் தெரிவித்தார்.
தமிழகத்தின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்.23) ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பல்வேறு முக்கிய தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்பட மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்கு செலுத்தி வருகின்றனர்.
இதனிடையே, சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கைச் செலுத்திய பிறகு, நடிகர் வசந்த் ரவி கூறுகையில், "இன்று எனது வாக்கைச் செலுத்தியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
Advertisement
Advertisement
இது மிகவும் முக்கியமான தேர்தல், எனவே தமிழக மக்கள் அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நமது தலைவரைத் தேர்ந்தெடுக்கும் ஒரே வாய்ப்பு இதுதான். அதனால் இது மிகவும் முக்கியமானது.
இன்னும் வாக்களிக்காதவர்கள், தயவுசெய்து முன்வந்து, உங்கள் உரிமையைப் பயன்படுத்தி, ஒரு தனிநபரின் சக்தியைக் காட்டுங்கள். அனைவரும் தங்கள் வாக்கைச் செலுத்துங்கள். உங்கள் கடமையை நிறைவேற்றுங்கள்" எனத் தெரிவித்தார்.
Speaking after casting his vote in the Tamil Nadu Assembly elections, actor Vasanth Ravi urged people to demonstrate the power of the individual.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.