ஜெயிலர் - 2 படப்பிடிப்பில் விபத்து: இளைஞர் பலி!
ஜெயிலர் - 2 படப்பிடிப்பில் விபத்து...
ஜெயிலர் - 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயிலர் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தாக சில நாள்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காட்சிகளில் திருப்தி இல்லாததால் இயக்குநர் நெல்சன் மேலும் 15 நாள்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு சென்னை பனையூரிலுள்ள ஆதித்யராம் ஸ்டூடியோவில் செட் அமைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், இன்று வீடு போன்ற செட் அமைப்பில் மின்விசிறியை மாட்டும்போது, சேலத்தைச் சேர்ந்த 28 வயதான கார்த்திகேயன் என்கிற இளைஞர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Advertisement
மின்சாரத்தால் தூக்கியெறியப்பட்ட இளைஞரின் உடலைக் கைப்பற்றிய கானத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த்தின் திரைப்படத்தில் பணியாற்றிய இளைஞரொருவர் விபத்தில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.