முகப்பு
செய்திகள்

தலைவர் - 173... வாக்கு கொடுத்த சிபி சக்ரவர்த்தி!

ரஜினி - 173 குறித்து....

Updated On : 1 பிப்ரவரி 2026, 2:21 pm IST
பகிர்:

நடிகர் ரஜினிகாந்த் - 173 திரைப்படம் குறித்து இயக்குநர் சிபி சக்ரவர்த்தி பேசியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் செல்சன் இயக்கத்தில் ஜெயிலர் - 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், தன் 173வது திரைப்படமாக சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

கூலி, ஜெயிலர் - 2 ஆகிய திரைப்படங்கள் ஆக்சன் படங்கள் என்பதால் அடுத்த திரைப்படத்திலாவது ஜனரஞ்சகமாக நடிக்க வேண்டும் என்பதற்காகவே இயக்குநர் சுந்தர். சி படத்தில் ஒப்பந்தமானார். ஆனால், சுந்தர் சி அப்படத்திலிருந்து விலக, இயக்குநர் சிபி சக்ரவர்த்தி 173-வது படத்தை இயக்குகிறார்.

Advertisement

Advertisement

மேலும், இப்படம் ஹாலிவுட்டில் வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்த, தி அவுட்பிட் (the outfit) திரைப்படத்தின் தழுவலாகவே உருவாகவுள்ளதாகவும் இதில் தையல்காரர் கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், வித் லவ் திரைப்பட நிகழ்வில் பேசிய இயக்குநர் சிபி சக்ரவர்த்தி, “தலைவர் - 173 திரைப்படத்தை நான்தான் இயக்குகிறேன் என்றதும் பலருக்கும் இவனா என்கிற பதட்டம் உண்டாகியுள்ளது. ஆனால், கண்டிப்பாக இப்படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது நிறைவுடன் வருவீர்கள். இது என் வாக்கு” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments