பாலன் வன்முறைப் படமல்ல: இயக்குநர் சிதம்பரம்
பாலன் குறித்து இயக்குநர் சிதம்பரம்...
இயக்குநர் சிதம்பரம் பாலன் தி பாய் படம் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் சிதம்பரத்தின் இயக்கிய “பாலன் தி பாய்” திரைப்படம் வருகிர ஜூன் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நடிகர் ஃபகத் ஃபாசில் நடிப்பில் வெளியான “ஆவேஷம்” பட இயக்குநர் ஜித்து மாதவன் இப்படத்துக்கு கதை எழுதியுள்ளார்.
காவல் துறையிடம் இருந்து தப்பித்து வெவ்வேறு பெயர்களில் மறைந்து வாழும் 10 வயது சிறுவனையும் அவனது தாயையும் மையமாகக் கொண்டு இது உருவாகியுள்ளது. டிரைலரில் வன்முறைப் படமாக இருக்கலாம் என ஊகிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய இயக்குநர் சிதம்பரம், “பாலன் திரைப்படம் வன்முறைப் படமல்ல. கிரைம் திரில்லர் தன்மை இருந்தாலும் இப்படம் முழுமையாக அம்மா - மகனுக்கு இடையேயான உறவை உணர்வுப்பூர்வமாக பேசும் படமாக உருவாகியுள்ளது. மற்ற படங்களை ஒப்பிடும்போது குறைவான வன்முறையே இதில் உள்ளது” எனக் கூறியுள்ளார்.
கேவிஎன் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படம் பான் இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது.
Director Chidambaram has spoken about the film The Boy
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.