முகப்பு
செய்திகள்

பாலன் வன்முறைப் படமல்ல: இயக்குநர் சிதம்பரம்

பாலன் குறித்து இயக்குநர் சிதம்பரம்...

Updated On : 15 ஜூன் 2026, 1:54 pm IST
இயக்குநர் சிதம்பரம்
பகிர்:

இயக்குநர் சிதம்பரம் பாலன் தி பாய் படம் குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் சிதம்பரத்தின் இயக்கிய “பாலன் தி பாய்” திரைப்படம் வருகிர ஜூன் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நடிகர் ஃபகத் ஃபாசில் நடிப்பில் வெளியான “ஆவேஷம்” பட இயக்குநர் ஜித்து மாதவன் இப்படத்துக்கு கதை எழுதியுள்ளார்.

காவல் துறையிடம் இருந்து தப்பித்து வெவ்வேறு பெயர்களில் மறைந்து வாழும் 10 வயது சிறுவனையும் அவனது தாயையும் மையமாகக் கொண்டு இது உருவாகியுள்ளது. டிரைலரில் வன்முறைப் படமாக இருக்கலாம் என ஊகிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய இயக்குநர் சிதம்பரம், “பாலன் திரைப்படம் வன்முறைப் படமல்ல. கிரைம் திரில்லர் தன்மை இருந்தாலும் இப்படம் முழுமையாக அம்மா - மகனுக்கு இடையேயான உறவை உணர்வுப்பூர்வமாக பேசும் படமாக உருவாகியுள்ளது. மற்ற படங்களை ஒப்பிடும்போது குறைவான வன்முறையே இதில் உள்ளது” எனக் கூறியுள்ளார்.

கேவிஎன் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படம் பான் இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது.

Director Chidambaram has spoken about the film The Boy

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.