முகப்பு
செய்திகள்

தாய் கிழவி இயக்குநருக்கு கார் பரிசளித்த சிவகார்த்திகேயன்!

இயக்குநர் சிவகுமார் முருகேசனுக்கு கார் பரிசளித்த சிவகார்த்திகேயன்...

Updated On : 8 ஜூலை 2026, 11:53 am IST
பகிர்:

தாய் கிழவி திரைப்படம் 100 நாள்களை நிறைவு செய்ததைத் தொடர்ந்து இயக்குநருக்கு சொகுசு கார் பரிசளிக்கப்பட்டது.

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான தாய் கிழவி திரைப்படம் கடந்த பிப். 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மதுரை பின்னணியில் பெண்கள் சுயமுன்னேற்றம் என்பது சேமிப்பில்தான் இருக்கிறது என்கிற கருத்தை மையப்படுத்திய கதையில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா சரத்குமார் நடித்திருந்தார்.

படத்தின் பெயருக்கு ஏற்ப வயதான தோற்றத்திற்கான நடை, வசன உச்சரிப்பு என அசத்தலான நடிப்பையும் ராதிகா கொடுத்திருந்தார். இப்படம் திரையரங்குகளில் 100 நாள்களை நிறைவு செய்ததைக் கொண்டாடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அங்கு, இயக்குநர் சிவகுமார் முருகேசனுக்கு தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் கார் பரிசளித்தார்.

Advertisement

Advertisement

இந்தாண்டில் இதுவரை வெளியான தமிழ்த் திரைப்படங்களிலேயே இப்படமே அதிக நாள்களைத் திரையரங்குகளில் நிறைவு செய்துள்ளது. ரூ. 92 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

The director was gifted a luxury car after the film Thaai Kizhavi completed a 100-day run.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments