பத்ம பூஷண் விருது பெற்றார் நடிகர் மம்மூட்டி!
பத்ம பூஷண் விருதைப் பெற்றார் நடிகர் மம்மூட்டி...
நடிகர் மம்மூட்டி நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருதைப் பெற்றுள்ளார்.
இந்தியளவில் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான மம்மூட்டி தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதுடன் கதையம்சமுள்ள படங்களைத் தயாரித்தும் வருகிறார். இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான களம்காவல் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக வெற்றியைப் பெற்றது.
பின், நடிகர் மோகன்லாலுடன் இணைந்து நடித்த பேட்ரியாட் சுமாரான விமர்சனங்களையே பெற்றதால் பெரிதாக வெற்றியைப் பெறவில்லை. தற்போது, மட்டஞ்சேரி மாஃபியா என்கிற திரைப்படத்திலும் தனுஷ் - 55 படத்திலும் நடித்து வருகிறார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், குடியரசு நாளன்று தனக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதை, நடிகர் மம்மூட்டி இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து பெற்றுக்கொண்டார். விருதைப் பெற்ற போது நடிகரும் அவரது மகனுமான துல்கர் சல்மான் அரங்கிலிருந்தபடி கைதட்டி மகிழ்ந்தார்.
Actor Mammootty has received the Padma Bhushan, one of the country's highest awards.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.