பத்ம விருதுகள் வழங்கும் விழா: 66 பேருக்கு நாளை விருதுகள் வழங்கி கௌரவிக்கும் குடியரசுத் தலைவர்!
66 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவிக்கும்குடியரசுத் தலைவர்!
புது தில்லி: ஒவ்வொரு வருடமும் மத்திய அரசின் பத்ம விருதுகளான (பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ) ஆகிய விருதுகள் குடியரசு நாளன்று வழங்கப்படுகிறது. கலை, அறிவியல், இலக்கியம், மருத்துவம், கல்வி, விளையாட்டு, சமூகநலன், பொதுப்பணிகள், தொழில் ஆகிய பிரிவுகளில் சிறந்து விளங்கும் நபா்களை அங்கீகரிக்கும் பொருட்டு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தாண்டு மொத்தம் 131 பேர் பத்ம விருதுகளைப் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டதில், மொத்தம் 19 பேர் பெண்களாவர். இந்திய வம்சாவளி மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 6 பேருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், 2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் விழாவில், 5 பேருக்கு பத்ம பூஷன், 13 பேருக்கு பத்ம விபூஷண், 113 பேருக்கு பத்ம ஸ்ரீ என மொத்தம் 131 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், திங்கள்கிழமை(மே 25) குடியரசுத் தலைவர் மாளிகையில் ஞானதந்திர மண்டபத்தில் நடைபெறும் விழாவில், முதல்கட்டமாக 66 பேருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பத்ம விருதுகளை வழங்குகிறார். மீதமுள்ள நபர்களுக்கு அடுத்தகட்டமாக நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.