இறுதிவரை மறக்க மாட்டேன்... முதல்வருக்கு நன்றி சொன்ன சாந்தனு!
நடிகர் சாந்தனுவின் பதிவு கவனம் பெற்று வருகிறது..
நடிகர் சாந்தனு முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
இயக்குநர், நடிகர் என இந்தியளவில் புகழ்பெற்ற கே. பாக்யராஜ் மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாரடைப்பு காரணமாக ஜூன் 27 காலை திடீரென உயிரிழந்தது அவரது ரசிகர்களிடம் சோகத்தையும் வேதனையையும் அளித்துள்ளது.
தொடர்ந்து, பாக்யராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்து நூற்றுக்கணக்கான திரைப் பிரபலங்கள் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு வந்தனர். முக்கியமாக, தமிழக முதல்வர் விஜய், நடிகர்கள் ரஜினிகாந்த், மம்மூட்டி உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும், இறுதிச்சடங்கில் அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நடிகரும் பாக்யராஜின் மகனுமான சாந்தனு பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது. என் திருமணத்திற்குத் தாலி எடுத்து தந்து என் மகிழ்ச்சித் திருநாளைத் துவக்கி வைத்தீர்கள். அதற்கே நானின்னும் நன்றி சொல்லித் தீரவில்லை. அதற்குள் என் வாழ்வின் துரதிருஷ்ட துக்க தினமான என் தந்தையின் மறைவிற்கு ஆறுதல் சொல்ல வந்த நீங்கள், பதவி சார்ந்த அந்தஸ்தை ஒதுக்கிவிட்டு, மண்டியிட்டு அம்மாவிடம் ஆறுதல் சொன்னதில் நான் நெகிழ்ந்து விட்டேன்.
அரசு மரியாதை! மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம். பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு நீங்கள் தந்ததை என் இறுதி வரை நன்றியோடு நினைத்துக் கொள்வேன். இப்போதைக்கு வேறென்ன சொல்ல? இதயம் கூப்பிய நன்றி அண்ணா” எனத் தெரிவித்துள்ளார்.
Actor Shanthanu has posted a message thanking Chief Minister Vijay.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.