முகப்பு
செய்திகள்

ரூ. 1000 கோடி முதலீடு... காத்திருக்கும் கேவிஎன் புரடக்‌ஷன்ஸ்!

கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் குறித்து...

Updated On : 16 மார்ச், 2026 at 9:49 AM
விஜய், யஷ்
பகிர்:

கேவிஎன் புரடக்‌ஷன்ஸ் நிறுவனம் ரூ. 1000 கோடிக்கும் அதிகமாக 3 திரைப்படங்களில் முதலீடு செய்துள்ளது.

பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவின் புரடக்‌ஷன்ஸ் நிறுவனம் தென்னிந்திய சினிமாவில் அதிக தொகையை முதலீடு செய்து வருகிறது.

முக்கியமாக, நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கியுள்ளனர். விஜய்யின் சம்பளம், உருவாக்கம் என ரூ. 400 கோடி வரை இப்படத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

அதேபோல், நடிகர் யஷ் நடித்த டாக்ஸிக் திரைப்படமும் ரூ. 500 கோடிக்கும் அதிகமான செலவிலேயே உருவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கன்னட படமான கேடி தி டெவில் (KD the devil) திரைப்படமும் பெரிய பொருள் செலவிலேயே உருவாகியுள்ளது. இம்மூன்று திரைப்படங்களையும் கேவிஎன் நிறுவனமே ரூ. 1000 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்து தயாரித்துள்ளது.

ஆனால், இன்னும் ஜன நாயகன் தணிக்கை வாரிய பிரச்னைகளால் வெளியாகமால் இருக்க, டாக்ஸிக் திரைப்படம் வருகிற மார்ச் 19 வெளியாக இருந்து, பின் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆக்சன் அதிரடி படமாக உருவான கேடி தி டெவில் திரைப்படமும் விரைவில் வெளியாகவுள்ளது.

சினிமாவில் அதிரடியாக பிரம்மாண்ட படங்களைத் தயாரித்து திரும்பிப் பார்க்க வைத்ததுடன் ரூ. 1000 கோடியை முதலீடு செய்துள்ள இந்நிறுவனம் அடுத்தடுத்து என்னென்ன திரைப்படங்களைத் தயாரிக்கவுள்ளது எனக் கேள்விகள் எழுந்து வருகின்றன!

summary

kvn productions invests more than rs. 1000 crores in jana nayagan, toxic and kd the devil

முழு கட்டுரையைப் படிக்க →