எதிர்நீச்சல் - 2 தொடர்: புதிய ஈஸ்வரி இவரா?
எதிர்நீச்சல் - 2 தொடரில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் ஸ்ரீஜா நடிக்கவுள்ளது குறித்து...
எதிர்நீச்சல் - 2 தொடரில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரீஜா நடிக்கவுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆணாதிக்கம் கொண்டவர்கள் இருக்கும் வீட்டுக்கு செல்லும் மருமகள்கள், புகுந்த வீட்டில் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்னைகளை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.
இந்தத் தொடரில் பார்வதி, கனிகா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி, வேல ராமமூர்த்தி, விபு ராமன் உள்ளிட்டோர் பிரதான பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகத்துக்குக் கிடைத்த வரவேற்பையடுத்து, இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு இரண்டாம் பாகத்திற்கு கிடைக்கவில்லை என பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது படிப்படியாக அதிக டிஆர்பி புள்ளிகளைப் பெற்று வருகிறது.
கதையின் படி, ஆதி குணசேகரனால் தாக்கப்படும் ஈஸ்வரி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து வருகிறார்.
ஈஸ்வரி பாத்திரத்தில் நடித்து வந்த கனிகா, தன்னுடைய மகனின் படிப்புக்காக இந்தத் தொடரிலிருந்து விலகினார்.
இந்த நிலையில், எதிர்நீச்சல் - 2 தொடரில் ஈஸ்வரி பாத்திரத்தில் பொம்மலாட்டம் தொடர் நடிகை ஸ்ரீஜா நடிக்கவுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஈஸ்வரி பாத்திரத்தில் ஸ்ரீஜா நடிக்கவுள்ளது தொடரில் பல திருப்பங்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கதையில் நிறைய மாற்றங்கள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
பொம்மலாட்டம் தொடரில் நடிகை ஸ்ரீஜா பயணம் மிக நீண்டது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் தொடரில் ஸ்ரீஜா நடித்திருந்தார். மேலும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண பரிசு, விதி உள்ளிட்ட தொடர்களிலும் இவர் நடித்துள்ளார்.
Informed sources report that actress Sreeja will play the role of Easwari in the series edhirneechal - 2.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.