சித்தாரே ஜமின் பர் ஓராண்டுக்குப் பின் ஓடிடியில் ரிலீஸ்! ஆமிர் கான் விளக்கம்!
நடிகர் ஆமிர் கானின் சித்தாரே ஜமின் பர் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து...
நடிகர் ஆமிர் கானின் சித்தாரே ஜமின் பர் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் சோனி லைவ் ஓடிடியில் வரும் மார்ச் 3ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆமிர் கான் புரடக்ஷன் தயாரிப்பில் ஆர்.எஸ். பிரசன்னா இயக்கத்தில் உருவான இந்தப் படம் கடந்தாண்டு ஜூன் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது.
தயாரிப்பாளரான ஆமீர் கான், சித்தாரே ஜமீன் பர் திரைப்படத்தை எந்தவொரு முன்னணி ஓடிடி தளங்களிலும் வெளியிடாமல், யூடியூபில் கட்டணம் வசூலித்து அனைவரும் காணும் வகையில் வெளியிடுவோம் என அறிவித்திருந்தார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நேரடியாக யூடியூப்பில் வெளியிடப்பட்டது. இந்தப் படம் திரையரங்கில் ரூ.200 கோடி வசூலித்தது. ஆனால், யூடியூப்பில் போதிய அளவு கவனம் பெறவில்லை எனக் கூறபடுகிறது.
இதுகுறித்து ஆமிர் கான், “எனக்கு இரண்டு மனநிலை கிடையாது. எப்போதுமே ஓடிடியில் வெளியிட விரும்புவேன். ஆனால், திரையரங்குகளில் வெளியான உடனேயே வெளியிட விருப்பமில்லை. அதனால், இப்போது சோனி லைவ் ஓடிடியில் ஏப்.3ஆம் தேதி வெளியாகிறது. திரையரங்கில் பார்க்காதவர்கள் ஓடியில் பார்க்கலாம்” எனக் கூறியுள்ளார்