நாயகனாக அறிமுகமாகும் விலங்கு, மாமன் பட இயக்குநர்..! முதல் பார்வை விடியோ!
இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் நாயகனாக நடித்துள்ள படத்தின் விடியோ குறித்து...
மக்கள் மத்தியில் பிரபலமடைந்த ’விலங்கு’ தொடர் குழுவின் புதிய இணையத் தொடரின் முதல் பார்வை புரோமோ விடியோ வெளியாகியுள்ளது.
இயக்குநர் விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில் நடிகர்கள் பிரசாந்த் பாண்டியராஜ், பாலாஜி சக்திவேல் மற்றும் காளி வெங்கட் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் ’வாரண்ட்’ என்ற புதிய இணையத் தொடரில் நடித்துள்ளார்கள்.
இந்தத் தொடரில் கௌசல்யா, அருள் ஜோதி, சாயாதேவி, ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
Advertisement
ஏ. ஆர். அசோக்குமார் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ள இந்தத் தொடரை, சிவன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் தயாரித்துள்ளார். கதை திரைக்கதையையும் எழுதியுள்ளார்.
குற்ற புலனாய்வு விசாரணை பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இந்த இணையத் தொடர், ஜீ 5 ஓடிடி தளத்தில் மே 22 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
’விலங்கு’ இணையத் தொடர் குழு, மீண்டும் ’வாரண்ட்’ என்ற புதிய இணையத் தொடரை எடுத்துள்ளதால், இந்தத் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், “அணிக்கு வாழ்த்துகள். இந்தத் தொடரின் முதல் பார்வை விடியோவை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். விலங்கு, மாமன் மாதிரியான படத்தைக் கொடுத்த நண்பர் பிரசாந்த் பாண்டியராஜ் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். வெற்றியடைய படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என்றார்.