சிவகார்த்திகேயன் எழுதிய வேலும் மயிலும் பாடல்!
நடிகர் சிவகார்த்திகேயன் எழுத்தில் வெளியாகியுள்ள பாடல் குறித்து...
நடிகர் சிவகார்த்திகேயன் எழுத்தில் உருவாகியுள்ள வேலும் மயிலும் என்ற புதிய பாடல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி திரைப்படத்தைத் தொடர்ந்து தாய் கிழவி இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில், நாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்க, மதுரை பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் முதல்முறையாக சிவகார்த்திகேயனுடன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் இணையவுள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Advertisement
இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில் சிவகார்த்திகேயன் வரிகளில், ‘வேலும் மயிலும்’ என்கிற பாடல் உருவாகியுள்ளது. இந்தப் பாடலை நிவாஸ் கே பிரசன்னா பாடியுள்ளார்.
இந்தப் பாடலை சிவக்குமார் முருகேசன் இயக்கியுள்ளார். இது, சுயாதீன பாடலாக உருவாகியுள்ளது.