கருப்பன் வருவான்... கண்ணீருடன் விடியோ வெளியிட்ட ஆர்ஜே பாலாஜி!
கருப்பு வெளியீடு ரத்தானது குறித்து ஆர்ஜே பாலாஜி...
இயக்குநர் ஆர்ஜே பாலாஜி கருப்பு திரைப்படத்தின் வெளியீடு ரத்தானது குறித்து கண்ணீருடன் விடியோ வெளியிட்டுள்ளார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர்களுக்கு இடையேயான நிதிப் பிரச்னையால் இன்று வெளியீட்டைச் சந்திக்காமல் இருக்கிறது. நடிகர் சூர்யாவும் இப்பிரச்னையைத் தீர்க்க பெரிய தொகையைச் செலுத்த முன் வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், கருப்பு திரைப்படத்தின் இயக்குநர் ஆர்ஜே பாலாஜி விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Advertisement
அதில், “அனைத்து ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன். இது நடந்திருக்கக் கூடாது. திரைப்படம் பார்ப்பதே நம் துன்பங்களை மறக்கத்தான். ஆனால், படம் பார்க்க வருவதே துன்பமாக அமைந்துவிடக்கூடாது. நானும் இதை எதிர்பார்க்கவில்லை. கருப்பன் வரான் வழி மறிக்காதே என்றால் நிறைய பேர் மறித்துக்கொண்டிருக்கிறார்கள். கடவுள் நம்முடன் இருக்கிறார். படம் இன்று மாலை வெளியாகும் என நம்புகிறேன். உங்களுக்கெல்லாம் கண்டிப்பாக பிடிக்கும்.” எனக் கண்ணீருடன் கூறியது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.