அனைத்து பக்கமும் திரையரங்கங்கள் தெறிக்கின்றன: ஆர்ஜே பாலாஜி
ஆர்ஜே பாலாஜி பதிவு...
கருப்பு திரைப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பு குறித்து இயக்குநர் ஆர்ஜே பாலாஜி பதிவிட்டுள்ளார்.
நடிகர் சூர்யாவின் திரைப்படங்களிலேயே அதிகம் வசூலித்த திரைப்படமாக கருப்பு மாறியுள்ளது. இதுவரை ரூ. 230 கோடி வரை வசூலித்த இப்படம் இந்த வார இறுதிக்குள் கூடுதல் வசூலைப் பெறும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளியாகி 10-வது நாளிலும் 900 திரைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது முதல் நாளைவிட அதிகம்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நேரடியாக பல பகுதிகளுக்குச் சென்று ரசிகர்களைச் சந்தித்த இயக்குநர் ஆர்ஜே பாலாஜி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “3 நாள்கள், 1200 கிலோமீட்டர், 11 மாவட்டங்கள், 14 மையங்கள், 15 காட்சிகள் என மறக்க முடியாத நினைவுகளும் நம்பவே முடியாத அன்பும் கிடைத்தன. சூர்யா சார் அனைத்து பக்கங்களிலும் திரையரங்கங்கள் தெறிக்கின்றன. மெகா பிளாக்பஸ்டர்” எனத் தெரிவித்துள்ளார்.