கேன்ஸ் திரைப்பட விழாவில் புறக்கணிப்பு? விமர்சனங்களுக்கு ஆலியா பட் பதிலடி!
நடிகை ஆலியா பட் தனக்கு வந்த கேலிக்குப் பதிலளித்துள்ளது குறித்து...
பாலிவுட் நடிகை ஆலியா பட் (33 வயது) கேன்ஸ் திரைப்பட விழாவில் லோரல் நிறுவனத்தின் விளம்பர தூதராகப் பங்கேற்றார். இந்த நிகழ்வில் புகைப்பட கலைஞர்கள் அவரைப் புகைப்படம் எடுக்காமல் புறக்கணித்தது குறித்து இன்ஸ்டாவில் கமெண்ட் செய்தவருக்கு ஆலியா பட் பதில் அளித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
கேன்ஸ் திரைப்பட விழாவில் கடந்த ஆலியா பட் மே.12, 13ஆம் தேதிகள் கலந்துகொண்டார். இந்த விழா மே 12 முதல் மே 23ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. கடந்தாண்டும் ஆலியா பட் இந்த விழாவில் பங்கேற்றிருந்தார்.
கேன்ஸ் விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பில் ஆலியா பட் நடந்துவரும்போது புகைப்பட கலைஞர்கள் அவரைப் படம் எடுக்க பெரிதாக ஆர்வம் காட்டாத விடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி பேசுபொருளாகின.
Advertisement
இணையத்தில் சிலர் நடிகைக்கு ஆதரவாகவும் சிலர் கேலியாகவும் இதுகுறித்து பேசத் தொடங்கினர். இந்த நிலையில், ஆலியா பட் தான் கேன்ஸ் விழாவில் பங்கேற்ற புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்தப் பதிவில் இணையவாசி ஒருவர், “என்ன ஒரு அவமானம், யாருமே உங்களைக் கண்டுகொள்ளவில்லை” எனக் கமெண்ட் செய்திருந்தார். இந்தக் கருத்துக்கு ஆலியா பட், “ஏன் அவமானம் அன்பே? நீ என்னைக் கண்டுகொண்டுள்ளாயே!” என மறுமொழி அளித்திருந்தார்.
ஆலியா பட்டின் இந்தக் கமெண்ட் சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது. விமர்சனங்களுக்கு சரியான பதிலடி எனவும் சிலர் இதெல்லாம் சமாளிப்பு எனவும் கூறிவருகிறார்கள்.