தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளுடன் பாடி மகிழ்ந்த விக்ரம்!
நடிகர் விக்ரம் பகிர்ந்த புதிய விடியோ...
நடிகர் விக்ரம் மூணாரில் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளுடன் பாடல் பாடி மகிழ்ந்தார்.
நடிகர் விக்ரம் தன் 63-வது திரைப்படத்திற்குத் தயாராகி வருகிறார். ஆனந்த் ஷங்கர் இயக்கும் இப்படத்தில் நாயகியாக நடிகை ரியா ஷிபு நடிக்கிறார். முழு ஆக்சன் திரைப்படமாக இது உருவாகவுள்ளது.
வீர தீர சூரன், தங்கலான் ஆகிய படங்கள் வணிக ரீதியாக பின்னடவைச் சந்தித்ததால் விக்ரமும் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மூணார் சென்ற நடிகர் விக்ரம் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளைச் சந்தித்தார். விக்ரமைக் கண்ட பெண்கள் பலரும், அவர் நடித்த படங்களில் தங்களுக்குப் பிடித்தவை குறித்து சிலாகரித்து பேசினர்.
தொடர்ந்து, அவர்களுடன் இணைந்து அந்நியன் படத்தில் இடம்பெற்ற, ‘அண்டங்காக்கா கொண்டக்காரி’ பாடலைச் சேர்ந்து பாடி மகிழ்ந்தார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Actor Vikram enjoyed singing songs with tea plantation workers in Munnar.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.