ஆச்சரியப்படுத்தும் கருப்பு வசூல்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கருப்பு வசூல் குறித்து....
நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படத்தில் வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.
கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரும்பாலான ரசிகர்களுக்குப் படம் பிடித்திருந்ததால் முதல் நாளிலிருந்து இன்றுவரை ஹவுஸ்ஃபுல் நிலையே தொடர்ந்து வருகிறது.
Advertisement
தமிழகம் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கில் நல்ல வரவேற்பு இருப்பதால் இந்தாண்டின் அதிகம் வசூலித்த திரைப்படங்களின் பட்டியலில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.
இந்த நிலையில், இப்படம் 3 நாள்களில் உலகளவில் ரூ. 147 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது, நடிகர் சூர்யாவின் அதிகம் வசூலித்த படமாக மாறவுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.