வெளியாவதற்கு முன்பே ரூ. 23 கோடி வரை வசூலித்த திரிஷ்யம் - 3!
திரிஷ்யம் - 3 முன் வெளியீட்டு வணிகம் குறித்து...
திரிஷ்யம் - 3 திரைப்படத்தின் முன் வெளியீட்டு வணிகம் கவனம் ஈர்த்துள்ளது.
மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப்புடன் மோகன்லால் இணைந்து அவர்களது கூட்டணியில் வெளியான திரிஷ்யம் பட்டி தொட்டியெங்கும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது, இதன் மூன்றாவது பாகம் நாளை (மே 21) வெளியாகிறது. நாயகன் ஜார்ஜ் குட்டி, தன் குடும்பத்தை பிரச்னையிலிருந்து மீட்டாரா, இல்லையா என்கிற முடிவுடன் திரிஷ்யம் நிறைவடைகிறது. இதன் அடுத்த பாகம் உருவாகவாது என இயக்குநரும் அறிவித்துவிட்டார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், டிக்கெட் முன்பதிவுகளிலேயே இப்படம் விரைவாக ரூ. 22.5 கோடி வரை வசூலித்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்பதிவுகள் நடைபெற்று வருவதால் இப்படம் முதல் நாளிலேயே ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
The pre-release business of the film Drishyam 3 has garnered attention.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.