ரூ. 200 கோடியை நெருங்கும் மோகன்லாலின் திரிஷ்யம் - 3!
திரிஷ்யம் - 3 திரைப்பட வசூல் குறித்து...
நடிகர் மோகன்லாலின் திரிஷ்யம் - 3 திரைப்படம் ரூ. 200 கோடியை நெருங்கியுள்ளதாம்.
நடிகர் மோகன்லால் இயக்குநர் ஜீத்து ஜோசஃப் கூட்டணியில் உருவான திரிஷ்யம் திரைப்படத் தொடரின் மூன்றாம் பாகம் வியாழக்கிழமை வெளியானது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கும் விதமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஆச்சரியப்படும் விதமாக 58 மணி நேரத்தில் இப்படம் ரூ. 100 கோடியை வசூலித்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்த நிலையில், இப்படம் வெளியான 6 நாள்களிலேயே ரூ. 170 கோடிக்கும் அதிகமாக வசூலித்துவிட்டதாகவும் கேரளத்தில் மட்டும் ரூ. 50 கோடியைக் கடந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
எம்புரானைத் தொடர்ந்து மிக வேகமாக ரூ. 100 கோடி வசூலைப் பெற்ற படமாக திரிஷ்யம் - 3 மாறியுள்ளதால் இந்தாண்டின் அதிகம் வசூலித்த மலையாளப் படம் பட்டியலில் இடம்பிடிக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.