நியூஸ் ரீல்

"ஜானி' பற்றி தயாரிப்பாளர் தியாகராஜன்

DIN

சிறிய இடைவெளிக்குப் பின் பிரசாந்த் மீண்டும் நடித்து வரும் படம் "ஜானி'.  சஞ்சிதா ஷெட்டி, பிரபு, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் வெற்றிச்செல்வன். படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. படம் குறித்து தயாரிப்பாளர்  தியாகராஜன் பேசும் போது...   இது ஒரு ஆக்ஷன் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை. படம் தொடங்கிய 15-ஆவது நிமிடத்தில் இருந்து கிளைமாக்ஸ் தொடங்கி விடும் என்பதுதான் திரைக்கதையின் புதுமை. அடுத்து என்ன என்பதைக் கணிக்க முடியாத அளவுக்கு படத்தின் வேகம் இருக்கும். 
 கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி  நடிக்கிறார். இது பிரசாந்தின் திருப்புமுனை படமாக இருக்கும் என்று நம்புகிறேன். அதே சமயத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் விதமாக படம் உருவாகியுள்ளது'' என்றார் தியாகராஜன்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT