நியூஸ் ரீல்

'ஒவ்வொரு பெண்ணுக்கும் வரப்போகும் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உண்டு!' இப்படிச் சொன்ன நடிகை யார்?

DIN

'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் மேகா ஆகாஷ். கௌதம் வாசுதேவ்மேனன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தாமதமாகி வருகிறது. இதற்கிடையில் 'பேட்ட', 'வந்தா ராஜாவாதான் வருவேன்', 'பூமராங்' படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் ஆனார் மேகா. முதல் படம் வெளியாகாத நிலையில் அதன் பின்னர் நடித்த படங்கள் வெளியாகி வருகின்றன. மேகா ஆகாஷ் இணைய தள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார். அன்றாட நிகழ்வுகளைப் பகிர்வதுடன் தனது புகைப்படங்கள், வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். 

அவரைப் பின்பற்றுபவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை சிலர் ஹேக் செய்திருப்பதுடன் அதில் உள்ள படங்கள், வீடியோக்களை திருடிவிட்டனர். இதற்கிடையில் மேகா ரசிகர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், 'எனது இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்கும் முயற்சி நடக்கிறது. இந்நிலையில் என் பெயரில் வரும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்'' என தெரிவித்துள்ளார்.  இதே போன்று  நடிகை ஹன்சிகாவின் செல்போன் மற்றும் இன்ஸ்டாகிராமை ஹேக் செய்த சிலர் அவரது அந்தரங்கப் படங்களை வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

**

ஹிந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதல் திருமணம் செய்து கொண்டார் ஜெனிலியா. 

இருவரும் தங்களது 7-ஆவது ஆண்டு திருமண விழாவை சமீபத்தில் கொண்டாடினார்கள். இதையொட்டி ரித்தேஷுக்கு ஜெனிலியா உருக்கமான கடிதம் எழுதி உள்ளார். அதுகுறித்து அவர் குறிப்பிட்டதாவது:

'ஒவ்வொரு பெண்ணுக்கும் வரப்போகும் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உண்டு. ஆனால் எனக்கு அப்படியொரு எண்ணம் இருந்ததில்லை. அதற்கு காரணம் எனது கணவர் ரித்தேஷ், திருமணத்துக்கு முன்பே எனது ஆகச்சிறந்த நண்பராக இருந்தார். நான் தோள் மீது சாய்ந்து அழ வேண்டும் என்று எண்ணும் நேரத்தில் எனக்கு தோள் கொடுப்பவராக ரித்தேஷ் இருக்கிறார். வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதுபற்றி எண்ணி கவலைப்படவிடாமல் நல்லவிதமாக என்னை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இன்னும் பல கோடி சந்தர்ப்பங்களில் சந்தோஷமாக சிரித்து மகிழவும், ஒருவர் கண்ணீரை ஒருவர் துடைத்துக் கொள்ளவும், பலவீனமான நேரத்தில் ஒருவரையொருவர் உயர்த்திக்கொள்ளவும் வாழ்க்கை முழுவதும் நாம் ஒன்றாகவே இணைந்திருப்போம்' என்றும் எழுதியுள்ளாராம் ஜெனிலியா. 

**

பூமராங் என்ற ஆயுதம் எங்கிருந்து கிளம்பியதோ  அதே இடத்துக்கு திரும்ப வருவதில் பிரசித்தி பெற்றது. அது 'பூமராங்' என தலைப்பிடப்பட்ட படத்துக்கும் மிகவும் பொருத்தமானது. அதர்வா நடிப்பில் கண்ணன் தயாரித்து இயக்கியுள்ள 'பூமராங்' மார்ச் 1-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் கண்ணன் கூறுகையில், ""ஆம், நாங்கள் "பூமராங்கிற்கு' பிறகு மீண்டும் இணைவதில் உற்சாகமடைகிறோம். 'பூமராங்' மிகச்சிறப்பாக உருவாகி இருப்பதில் மகிழ்ச்சி. 'பூமராங்' முடியும் முன்பாகவே அதர்வாவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதற்கு எனக்கு விருப்பம் இருந்தது. அதற்கு காரணம் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் அவரது கவர்ச்சிகரமான மற்றும் அழகான ஹீரோ தோற்றம் மட்டுமல்ல, அவரது அர்ப்பணிப்பு, . இயற்கையாகவே, அவர் தயாரிப்பாளர்களின் வரம் என்று ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறார்.  ஆரம்பத்தில், 'என்னுடன் மீண்டும் வேலை செய்ய விருப்பமா?'' என அவரிடம் கேட்க தயக்கம் இருந்தது. ஆனால் என் சந்தேகங்களை அவர் தகர்த்தார்.  "பூமராங்கில்' இருந்து வேறுபட்ட ஒரு வகை படமாக கொடுக்க முயற்சிக்கிறோம்.  சமுத்திரகனி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'அர்ஜுன் ரெட்டி' ரதன் இந்த படத்துக்கு இசையமைக்கிறார் என்றார்.   

**

கமர்ஷியல்ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் ரஜினியின் 'பேட்ட' படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.  ரஜினியின் சமீப கால படங்களிலிருந்து வசூல்ரீதியாகவும் இப்படம் சாதனை புரிந்துள்ளது. இதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளதாக கிசுகிசு பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து, ரஜினி தரப்பிலும், முருகதாஸ் தரப்பிலும் உறுதி செய்யப்படாத நிலையில் அப்படம் பற்றி விதவிதமான தகவல்கள் மட்டும் கசிந்த வண்ணமிருக்கின்றன.   இந்த நிலையில் ரஜினி ரசிகர் ஒருவர் முருகதாஸ் படத்தில் ரஜினியின் தோற்றம் எப்படி இருக்கும் என்பதை கற்பனையில் யூகித்து அதை வடிவமைத்து இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார். கண்களில் கூலிங்கிளாஸ் அணிந்து பெப்பர் சால்ட் தோற்றத்தில் பீடி புகைத்தபடி துப்பாக்கியுடன் நிற்பதுபோல் ரஜினியின் படம் இடம்பெற்றுள்ளது. இதனை பெரும்பான்மையான ரசிகர்கள் வரவேற்று கருத்து தெரிவித்து வருகின்றனர். 

**

'நாடோடிகள் 2', 'கொம்பு வச்ச சிங்கம்டா', 'கென்னடி கிளப்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சசிகுமார்.  இதனைத் தொடர்ந்து தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை சுந்தர்.சியிடம் உதவியாளராக இருந்த கதிர்வேலு கதை எழுதி இயக்குகிறார். இந்த படம் சசிகுமாருக்கு 19-ஆவது படமாகும். இப்படத்தில் சசிகுமார் ஐ.டி. தொழில்நுட்ப பணியாளராக நடிக்கிறார். 

செந்தூர் பிலிம்ஸ் சார்பில் டிடி.ராஜா  தயாரிக்கிறார். சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார், சாம்.சிஎஸ் இசையமைக்கிறார்.கலை இயக்கம் சுரேஷ். படத்தொகுப்பினை சபு  ஜோசப் செய்கின்றனர்.

சசிகுமார் ஜோடியாக நிக்கி கல்ராணி ஒப்பந்தமாகியுள்ளார். ராதாரவி, தம்பி ராமைய்யா, விஜயகுமார், ரேகா,சுமித்ரா , சதிஷ் ,மனோபாலா ரமேஷ் கண்ணா, சிங்கம் புலி, நிரோஷா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் ஏற்கின்றனர். முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் தொடங்கியுள்ளது. சென்னை, பாண்டிச்சேரி மற்றும் சில வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மே மாத வெளியீடாக படம் திரைக்கு வரவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 தொடரை வெல்லப்போவது யார்?

தூத்துக்குடி மாவட்டத்துக்கு மே 22-ல் உள்ளூர் விடுமுறை!

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தானுடன் இணையும் கேரி கிறிஸ்டன்!

பேருந்து, ரயில், மெட்ரோவுக்கு ஒரே டிக்கெட்: வெளியான அறிவிப்பு!

‘ஏஐ படங்களில் வருவதுபோல..’ புதிய சாட்ஜிபிடி அறிமுகத்தில் சாம் ஆல்ட்மேன்!

SCROLL FOR NEXT