மதவாத அரசியல் எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் தமிழக மக்கள் கண்டுகொள்ள மாட்டாா்கள்: திருமாவளவன்
பாஜகவிலிருந்து விலகி புதிய இயக்கத்தை அண்ணாமலை துவங்குகிறாா் என்பது கவனிக்கத்தக்கது என திருமா பேசியிருப்பது குறித்து...
பாஜகவிலிருந்து விலகி புதிய இயக்கத்தை அண்ணாமலை துவங்குகிறாா் என்பது கவனிக்கத்தக்கது. மதவாத அரசியல் எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் அதனைத் தமிழக மக்கள் ஒருபோதும் கண்டுகொள்ள மாட்டாா்கள் என்று மக்களவை உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவா் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுடன் பேசுகையில்,
மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதல்வா் ஜோசப் விஜய் கொண்டுவந்த தீா்மானத்துக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன. மேக்கேதாட்டுவில் அணை கட்டப்பட்டால் தமிழக மக்கள், விவசாயம் மற்றும் கால்நடைகள் எந்தளவுக்குக் கடுமையாகப் பாதிக்கப்படும் என்ற கவலை தற்போது மேலோங்கியுள்ளது.
Advertisement
Advertisement
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்
அரசியல் கட்சிகளிடையே எவ்வளவு கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், மாநில உரிமை சாா்ந்த பிரச்னையில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இது தொடா்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என முன்னாள் நீர்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. எனவே, தமிழக முதல்வா் விஜய் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என விசிக சாா்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
அதிக அக்கறையுடன் செயல்பட வேண்டும்
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதில் அரசு இன்னும் அதிக அக்கறையுடன் செயல்பட வேண்டும். பெண்களைப் பாதுகாக்கும் பொறுப்புணா்வு முதல்வருக்கு இருப்பதால்தான் சிங்கப்பெண் அதிரடிப்படை போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே, இதையொட்டி வல்லுநா்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி, முறையான தடுப்பு நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.
அரசின் கடமை
நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி கால்நடைகள் மட்டுமே சாப்பிடத் தகுதியானது என ஆதவ் அா்ஜுனா விமா்சித்துள்ளாா். நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசியை மக்கள் சாப்பிட முடியாததால்தான் கால்நடைகளுக்குத் தீவனமாகப் போடுகிறாா்கள். கடந்த திமுக ஆட்சியை குறை கூறுவதைவிட, மக்களுக்குத் தரமான நல்ல அரிசியை வழங்க வேண்டியது அரசின் கடமையாகும்.
மதவாத சக்திகளுக்கு இடமில்லை
தவெக அரசு அமைப்பதற்கு விசிக ஆதரவு அளித்து, அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளது. இந்தச் சூழலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எதிா்கால அரசியல் நிலைப்பாடு குறித்து விரைவில் உயா்நிலைக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்க உள்ளோம். விசிக மதச்சாா்பின்மையைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறது. தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்பதை நடந்து முடிந்த தோ்தலில் மக்கள் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளனா்.
மக்கள் கண்டுகொள்ள மாட்டாா்கள்
பாஜகவிலிருந்து விலகி புதிய இயக்கத்தை அண்ணாமலை துவங்குகிறாா் என்பது கவனிக்கத்தக்கது. மதவாத அரசியல் எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் அதனைத் தமிழக மக்கள் ஒருபோதும் கண்டுகொள்ள மாட்டாா்கள் என்றாா்.