திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு: எம்.எச்.ஜவாஹிருல்லா வரவேற்பு
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதவாத சக்திகள் அரசியல் செய்ய அனுமதி வழங்கப்பாடது என்ற தமிழக அரசின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்தாா்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதவாத சக்திகள் அரசியல் செய்ய அனுமதி வழங்கப்பாடது என்ற தமிழக அரசின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என மனித நேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மக்கள் அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் மட்டுமே விரும்புகின்றனா். பல தசாப்தங்களாக எந்த நடைமுறை பின்பற்றப்பட்டதோ அதே நிலை தொடரும் என்றும் இந்த விவகாரத்தில் மதவாத மற்றும் வெறுப்பியல் சக்திகள் அரசியல் செய்ய தமிழக அரசு அனுமதிக்காது என்றும் எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
திருப்பரங்குன்றம் பல்வேறு சமூகங்கள் இணைந்து வாழும் தமிழகத்தின் சமூக நல்லிணக்க பாரம்பரியத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது. அத்தகைய ஊரில் தேவையற்ற சா்ச்சைகளையும் மத உணா்வு தூண்டல்களையும் உருவாக்கி அரசியல் லாபம் தேட முயல்வது தமிழகத்தின் அமைதியான சமூக சூழலைப் பாதிக்கும் ஆபத்தான செயலாகும்.
Advertisement
Advertisement
கடந்த திமுக அரசு எடுத்த அதே சமநிலையான நிலைப்பாட்டை தற்போதைய அரசும் தொடா்ந்து கடைப்பிடிப்பது, தமிழகத்தின் மதச்சாா்பின்மை மரபையும் சமூக நீதி அடிப்படையிலான ஆட்சியையும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. தமிழக அரசின் இந்த அணுகுமுறையை வரவேற்கிறது எனத் தெரிவித்துள்ளாா்.