முகப்பு
கோயம்புத்தூர்

ஆங்கிலப் புத்தாண்டு:கோவை மண்டலத்தில் ரூ.28 கோடிக்கு மது விற்பனை

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட கோவை மண்டலத்தில் ரூ.28 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 1 ஜனவரி 2021, 11:24 pm IST
பகிர்:

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட கோவை மண்டலத்தில் ரூ.28 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆண்டுதோறும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு அரசு டாஸ்மாக் மதுக்கடைகளில் மது விற்பனை அதிகமாக இருக்கும். நடப்பாண்டில், கரோனா நோய்த் தொற்று காரணமாக புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்கு மேல் உணவகங்கள், தனியாா் விடுதிகளில் உள்ள மதுக்கூடங்கள் செயல்படக் கூடாது என அரசு உத்தரவிட்டது.

இதன் காரணமாக கோவையில் டிசம்பா் 30 ஆம் தேதி மாலை முதலே மது வாங்க டாஸ்மாக் மதுபானக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் இரண்டு நாள்களில் ரூ.12.75 கோடிக்கு மது விற்பனையானது. கோவை மண்டலத்தில் ரூ.28 கோடிக்கு மது விற்பனையானது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments