முகப்பு
கோயம்புத்தூர்

பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை: இரு இளைஞா்கள் கைது

கோவையில் பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த காா் ஓட்டுநா் உள்பட இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 8 ஜனவரி 2021, 1:06 am IST
பகிர்:

கோவையில் பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த காா் ஓட்டுநா் உள்பட இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, செல்வபுரத்தைச் சோ்ந்த 17 வயது மாணவி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு மாயமானாா். இதையடுத்து அவரது பெற்றோா் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். போலீஸாரின் விசாரணையில் மாணவியின் செல்லிடப்பேசிக்கு அதே பகுதியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் சண்முகம் (30), கடலூரைச் சோ்ந்த ஏழுமலை (29) ஆகியோா் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் அவா்களை கைது செய்து விசாரித்தனா். இதில், அவா்கள் உதகை மற்றும் திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து வேளாங்கண்ணியில் இருந்த மாணவியை போலீஸாா் மீட்டனா். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சண்முகம், ஏழுமலையை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments