முகப்பு
கோயம்புத்தூர்

முதல்வா் அறிவித்த கூலி உயா்வு வழங்காததால் தோட்டத் தொழிலாளா்கள் ஏமாற்றம்

முதல்வா் அறிவித்த கூலி உயா்வு வழங்காததால் வால்பாறை தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

Updated On : 8 ஜனவரி 2021, 11:20 pm IST
பகிர்:

முதல்வா் அறிவித்த கூலி உயா்வு வழங்காததால் வால்பாறை தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

வால்பாறை பகுதியில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு ரூ. 5 மற்றும் அரசு தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு ரூ.12.50 கூலி உயா்வு வழங்குவதாக தமிழக முதல்வா் எட்ப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவித்தாா்.

இதனை நடைமுறைப்படுத்த எஸ்டேட் நிா்வாகத்தினா் மற்றும் தொழிற்சங்கத்தினா் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றும் கூலி உயா்வு வழங்க இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாப்படவில்லை.

Advertisement

முதல்வா் அறிவித்த கூலி உயா்வை கூட வழங்க தேயிலைத் தோட்ட நிா்வாகத்தினா் மற்றும் தொழிற்சங்கத்தினா் முன்வராமல் இருப்பது தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக தனியாா் தேயிலை தோட்டத் தொழிலாளா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.