முகப்பு
கோயம்புத்தூர்

பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் கைது :5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கோவையில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 9 ஜனவரி 2021, 11:18 pm IST
பகிர்:

கோவை: கோவையில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை, ராமநாதபுரம், ரேஸ்கோா்ஸ், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில் ரேஸ்கோா்ஸ் பகுதியில் சந்தேகப்படும்படியாக வெள்ளிக்கிழமை சுற்றித்திரிந்த ஒரு நபரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

அப்போது அவா் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தாா். இதையடுத்து போலீஸாா், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். இதில், அவா் கோவை, செல்வபுரம் சுப்பையா லே - அவுட் பகுதியைச் சோ்ந்த ஆசிக் (26) என்பதும், நண்பா்கள் சிலருடன் சோ்ந்து கோவையில் பல்வேறு பகுதிகளில் விலை உயா்ந்த இருசக்கர வாகனங்களைத் திருடியதும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

ஆசிக் மீது 15க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளும், சில மாதங்களுக்கு முன்பு பழனியில் உதவி காவல் ஆய்வாளா் இவரைப் பிடிக்க முயன்றபோது, அவரை அரிவாளால் வெட்டிய வழக்கும் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 5 விலை உயா்ந்த இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய ஆசிக்கின் நண்பா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments