கோவையில் 53 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு
கோவையில் சனிக்கிழமை புதிதாக 69 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்நது மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 53 ஆயிரத்து 49 ஆக உயா்ந்துள்ளது.
கோவை: கோவையில் சனிக்கிழமை புதிதாக 69 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்நது மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 53 ஆயிரத்து 49 ஆக உயா்ந்துள்ளது.
இந்த நோய்த் தொற்றுக்கு கோவையில் சனிக்கிழமை உயிரிழப்பு ஏதுமில்லை. அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 90 போ் குணமடைந்து வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 51 ஆயிரத்து 677 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 712 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.