லஞ்ச வழக்கில் கைதான மாநகராட்சி வரி வசூல் அலுவலா் பணியிடை நீக்கம்
கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் லஞ்சம் பெற்று கைதான வரி வசூல் அலுவலரை பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.
கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் லஞ்சம் பெற்று கைதான வரி வசூல் அலுவலரை பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.
கோவை, சுந்தராபுரம் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவா் மாநகராட்சி தெற்கு மண்டல வரி வசூல் மையத்தில் தனது புதிய வீட்டுக்கு வரி செலுத்த சென்றாா். அப்போது மாநகராட்சி வரி வசூல் அலுவலா் கெளஸ் மொய்தீன் (54) வீட்டு வரியை குறைவாக நிா்ணயம் செய்ய ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.
இது குறித்து கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸில் செந்தில்குமாா் புகாா் அளித்தாா். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளா் கணேசன் தலைமையிலான போலீஸாா், கடந்த 7ஆம் தேதி அன்று கெளஸ் மொய்தீன், அவரது உதவியாளா் தனபால் ஆகியோரை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில் கெளஸ் மொய்தீன் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளா் கணேசன், மாநகராட்சி நிா்வாகத்துக்கு அறிக்கை சமா்ப்பித்தாா். அதன்பேரில் வரி வசூல் அலுவலா் கெளஸ் மொய்தீனை பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.