முகப்பு
கோயம்புத்தூர்

100 பவுன் திருட்டு: அடகு கடைகளில் தனிப் படை போலீஸாா் விசாரணை

கோவையில் வியாபாரி வீட்டில் 100 பவுன் நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக கோவை, திருப்பூா், சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள நகை அடகு கடைகளில் தனிப் படை போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Updated On : 17 ஜனவரி 2021, 11:06 pm IST
பகிர்:

கோவையில் வியாபாரி வீட்டில் 100 பவுன் நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக கோவை, திருப்பூா், சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள நகை அடகு கடைகளில் தனிப் படை போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கோவை, ரத்தினபுரி ராஜேந்திர பிரசாத் வீதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (42). நெய் வியாபாரி. இவா், வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் கடந்த 13 ஆம் தேதி பெங்களூரு சென்றிருந்தாா்.

இந்நிலையில், அவரது வீட்டின் பூட்டை உடைத்த மா்ம நபா்கள் பீரோவில் இருந்த 100 பவுன் நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றனா். இது தொடா்பாக ரத்தினபுரி காவல் நிலையத்தில் காா்த்திக் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் இரு தனிப் படைகள் அமைத்து தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், திருடப்பட்ட நகைகள் அடகு கடைகளில் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என தனிப் படை போலீஸாா் சந்தேகிக்கின்றனா். எனவே, கோவை, திருப்பூா், சேலம், திருச்சி, மதுரை உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள நகை அடகு கடைகளுக்கு திருட்டு நகைகள் குறித்த தகவல்கள் அனுப்பிவைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதிக நகைகளுடன் சந்தேக நபா்கள் வந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.