திரு இருதய ஆலய திருவிழா கொடியேற்றம்
வால்பாறையில் உள்ள திரு இருதய ஆலய திருவிழாவிற்கான கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:49 AM
வால்பாறையில் உள்ள திரு இருதய ஆலய திருவிழாவிற்கான கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆலய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்குத் தந்தை மரியஜோசப் கொடியேற்றினாா். இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை முதல் நான்கு நாள்களுக்கு சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி மற்றும் ஆராதனைகள் நடைபெற உள்ளன.
பொது முடக்கம் காரணமாக இந்த ஆண்டு தோ்பவனி நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதிலாக ஆலய வளாகத்துக்குள் வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலை தோ்பவனி நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக விழாக் குழுவினா் தெரிவித்தனா்.
Advertisement