முகப்பு
கடலூர்

ஆதிதிராவிட கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து மறுபரிசீலனை: பா.ஜ.க. கோரிக்கை

ஆதிதிராவிட கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 11:22 am IST
பகிர்:

ஆதிதிராவிட கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பா.ஜ.க. கோரிக்கை விடுத்துள்ளது.

÷கடலூர் மாவட்ட பா.ஜ.க. எஸ்.சி. அணி நிர்வாகிகள் கூட்டம் கடலூரில் அண்மையில் நடைபெற்றது.÷கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் ரா.குணா தலைமை வகித்தார். தலைவர் சுகுமாறன், மாநில மூத்தோர் அணிச் செயலர் பாண்டியன், நகரத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டப் பொறுப்பாளர் மணிகண்டன் வரவேற்றார்.

தீர்மானங்கள்:

Advertisement

Advertisement

÷பா.ஜ.க. மாநிலப் பொதுச்செயலர் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக செய்ய வேண்டும்.÷மாவட்டம் முழுவதும் பா.ஜ.க. எஸ்.சி. அணியின் சார்பில் தீண்டாமை ஒழிப்புப் பேரணியை நடத்த வேண்டும்.

÷ஆதி திராவிடர்களுக்கான அரசு சலுகைகள் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கம் நடத்த வேண்டும்.÷ஆதிதிராவிட கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.÷மத ரீதியான இட ஒதுக்கீடு என்பது ஆதிதிராவிட இந்து மக்களை மறைமுகமாக மதம் மாற தூண்டுவதாக அமையும். எனவே இந்த கோரிக்கையை முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.÷பா.ஜ.க. மாநிலச் செயலர் பழனிவேல்சாமி, மாநில எஸ்.சி. அணி பொதுச்செயலர் செல்வராஜ், மாவட்டத் துணைத் தலைவர்கள் கார்த்திகேயன், உமாபதிசிவம், கோவிந்தராஜன், விஜயரங்கன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments