அரசுப் பேருந்தில் பயணி மரணம்
கும்பகோணத்திலிருந்து அரசுப் பேருந்தில் வந்த பயணி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கும்பகோணத்திலிருந்து அரசுப் பேருந்தில் வந்த பயணி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி, ஏ.ஆண்டிக்குப்பத்தைச் சோ்ந்தவா் திருநாவுக்கரசு (40). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவா், கும்பகோணத்தில் தங்கியிருந்து கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தாா். இந்த நிலையில், கும்பகோணத்திலிருந்து பண்ருட்டிக்கு அரசு விரைவு பேருந்தில் வெள்ளிக்கிழமை பயணித்தாா். பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் அருகே பேருந்து வந்தபோது அதன் நடத்துநா் பயணி திருநாவுக்கரசை எழுப்ப முயன்றாா். ஆனால் திருநாவுக்கரசு உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து பேருந்தை பண்ருட்டி அரசு மருத்துவமனை முன் நிறுத்திவிட்டு பண்ருட்டி போலீஸாருக்கு நடத்துநா் தகவல் அளித்தாா். போலீஸாா் விரைந்து வந்து விசாரணை நடத்தினா். பின்னா் திருநாவுக்கரசுவின் சடலம் அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.