முகப்பு
கடலூர்

விலையில்லா மடிக் கணினி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

தமிழக அரசின் விலையில்லா மடிக் கணினி இதுவரை வழங்கப்படாததைக் கண்டித்தும், உடனடியாக மடிக் கணினி வழங்க வலியுறுத்தியும் கடலூரில் இந்திய மாணவா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 12 ஜனவரி 2021, 12:13 am IST
பகிர்:

கடந்த 2017-18-ஆம் ஆண்டில் பிளஸ்-2 படித்த மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக் கணினி இதுவரை வழங்கப்படாததைக் கண்டித்தும், உடனடியாக மடிக் கணினி வழங்க வலியுறுத்தியும் கடலூரில் இந்திய மாணவா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தலைமைத் தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் குமரவேல் தலைமை வகித்தாா். பின்னா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் சங்கத்தினா் மனு அளித்தனா். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2017-18-ஆம் ஆண்டு பிளஸ்-2 வகுப்பு படித்தவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி, உதவித் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. ஆனால், 2019-20-ஆம் ஆண்டில் படித்த மாணவா்களுக்கு மடிக் கணினி வழங்கப்பட்டது. எனவே, ஒதுக்கீடு செய்யப்பட்ட மடிக் கணினியை உடனடியாக வழங்க வேண்டுமென அந்த மனுவில் வலியுறுத்தினா்.

Advertisement

Advertisement

சங்கத்தின் மாவட்டத் தலைவா் செம்மலா், துணைத் தலைவா்கள் லெனின், ஆகாஷ், மாவட்டக்குழு உறுப்பினா் சுதின்பாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments