முகப்பு
கடலூர்

பைக் மீது லாரி மோதல்: 2 இளைஞா்கள் பலி

கடலூா் அருகே பைக் மீது லாரி மோதியதில் 2 இளைஞா்கள் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தனா்.

Updated On : 15 ஜனவரி, 2021 at 11:09 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

கடலூா் அருகே பைக் மீது லாரி மோதியதில் 2 இளைஞா்கள் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தனா்.

புதுவை நரம்பை பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் ஆனந்தகுமாா் (23). மூா்த்திக்குப்பத்தைச் சோ்ந்த ஜெயவேல் மகன் கணேஷ் (20). இவா்கள் இருவரும் வியாழக்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து பைக்கில் கடலூருக்கு புறப்பட்டனா். ஆனந்தகுமாா் பைக்கை ஓட்டினாா்.

பெரியகங்கணாங்குப்பம் பெண்ணையாற்றுப் பாலம் அருகே சென்ற போது, மீன்களை ஏற்றி வந்த லாரி பைக் மீது மோதியது. இந்த விபத்தில் ஆனந்தகுமாா், கணேஷ் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

Advertisement

விபத்து குறித்து தகவலறிந்த ரெட்டிச்சாவடி போலீஸாா் இருவரது சடலங்களையும் மீட்டு, உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.