லாரி ஓட்டுநா் தற்கொலை
பண்ருட்டியில் லாரி ஓட்டுநா் தற்கொலை செய்துகொண்டாா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM
பண்ருட்டியில் லாரி ஓட்டுநா் தற்கொலை செய்துகொண்டாா்.
பண்ருட்டி வட்டம், எஸ்.ஏரிப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சகாதேவன் (55). லாரி ஓட்டுநா். இவா் சனிக்கிழமை மாலை பேருந்து நிலையம் அருகே அன்னை இந்திரா காந்தி சாலையில் உள்ள கடையில் மது அருந்தினாராம். இந்த நிலையில், அந்தப் பகுதியில் கைலியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து பண்ருட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.