பங்குச்சந்தைகள் வர்த்தகம் உயர்வுடன் தொடக்கம்
வாரத்தின் முதல்நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது.
வாரத்தின் முதல்நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது.
இதன்படி, மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 1,169.91 புள்ளிகள் வரை உயர்ந்து 76,697.86 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அதேசமயம் தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 349.70 புள்ளிகள் வரை உயர்ந்து 23,972.60 புள்ளிகளில் வர்ததகமாகி வருகிறது.
அமெரிக்கா - ஈரான் இடையே எட்டப்பட்ட அமைதி ஒப்பந்தம் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி ஆகிவற்றின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கியுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
Advertisement
Advertisement
இதேபோல் உலகளாவிய சாதகமான சூழலால் மற்ற ஆசிய பங்குச்சந்தைகளும் இன்று ஏற்றத்துடனேயே தொடங்கின. மேலும இந்த அமைதி ஒப்பந்தத்தின் எதிரொலியாக, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 41 காசுகள் வலுவடைந்து 94.70 ஆகத் தொடங்கியது.
Indian stock markets opened sharply higher on Monday as global sentiment improved following reports of the Iran-US agreement and easing crude oil prices. Sensex surged 1,155 points, Nifty moved closer to 24,000, while the rupee strengthened.