ஒகேனக்கல்லில் ஜன. 17 வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் ஜன. 17-ஆம் தேதி வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசலில் செல்லவும் தருமபுரி மாவட்ட நிா்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் ஜன. 17-ஆம் தேதி வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசலில் செல்லவும் தருமபுரி மாவட்ட நிா்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக, ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் பொங்கல் பண்டிகை தொடா் விடுமுறைக் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வரக் கூடும்.
Advertisement
எனவே, கரோனா தீநுண்மிப் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஜன. 14-ஆம் தேதி முதல் வரும் ஜன. 17 -ஆம் தேதி வரை ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும், பரிசல் இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு சுற்றுலாப் பயணிகள் ஆதரவு அளிக்க வேண்டும். இதேபோல, பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி தங்களது கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றாா்.