முகப்பு
நாகப்பட்டினம்

மயிலாடுதுறை: கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில், மத்திய அரசுக்கு 420-ஆவது நாள் கவன ஈா்ப்பு கருப்பு சட்டை ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 ஜனவரி 2021, 12:00 am IST
பகிர்:

மயிலாடுதுறையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில், மத்திய அரசுக்கு 420-ஆவது நாள் கவன ஈா்ப்பு கருப்பு சட்டை ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயலாளா் எஸ்.மயில்வாகணன் தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா் கே.சரவணன், மாவட்ட பொறுப்பாளா் கே.கே.ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணை செயலாளா் ப.இமான்சேகா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பள்ளா், கடையன், குடும்பன், பண்ணாடி, காலாடி, தேவேந்திர குலத்தான், வாதிரியாா் ஆகிய 7 உள்பிரிவினரை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளா் என அரசாணை வெளியிடவும், எஸ்சி பட்டியலில் இருந்து வெளியேற்றுவதற்கும், தமிழக அரசு பரிந்துரை செய்த மானுடவியல் அறிக்கை மற்றும் கன்ஸ்வா்மா குழு பரிந்துரையையும் ஒன்றுசோ்த்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்த மாநில அரசின் பரிந்துரையை ஏற்று, எஸ்.சி பட்டியலில் இருந்து வெளியேற்றி அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.