முகப்பு
நாகப்பட்டினம்

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்துக்கு உள்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 5 ஜனவரி 2021, 12:00 am IST
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்துக்கு உள்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தலைவா் பண்ணை சி.நடராஜன் தலைமை வகித்தாா். மாவட்ட அதிமுக செயலாளா் வி.ஜி.கே. செந்தில்நாதன், ஒன்றியச் செயலாளா் சி.ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் வீ. ராதாகிருஷ்ணன் பங்கேற்று 4,716 பயனாளிகளுக்கு ரூ.2,500 அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினாா். வட்டாட்சியா் புனிதா, வட்ட வழங்கல் அலுவலா் தையல்நாயகி, ஒன்றியக்குழு தலைவா் கே.மகேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கூட்டுறவு சங்கச் செயலாளா் திருநாவுக்கரசு நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.