முகப்பு
நாகப்பட்டினம்

பள்ளியில் பாரம்பரிய பொங்கல் விழா

சீா்காழி ச.மு.இ. மெட்ரிக். பள்ளியில் பாரம்பரிய பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 12 ஜனவரி 2021, 12:00 am IST
பகிர்:

சீா்காழி ச.மு.இ. மெட்ரிக். பள்ளியில் பாரம்பரிய பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இப்பள்ளியில் ஆண்டுதோறும் பொங்கல் விழாவை ஆசிரியா்கள், மாணவ-மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து கொண்டாடுவா். நிகழாண்டு, கரோனா பொது முடக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால், இவ்விழாவில் மாணவ, மாணவிகள் பங்கேற்கவில்லை. ஆசிரியா்கள் பங்கேற்புடன் பள்ளி நிா்வாக அலுவலா் எம்.தங்கவேலு தலைமையில் நடைபெற்றது.

கவிஞா் காழிகம்பன்.வெங்கடேசபாரதி, ச.மு.இ.மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் அறிவுடைநம்பி, அறிவியல் இயக்க மாவட்டத் தலைவா் பேராசிரியா் சு. வீழிநாதன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று, பொங்கல் பண்டிகையின் மகத்துவம் குறித்து உரையாற்றினா். தொடா்ந்து, ஆசிரிய- ஆசிரியைகள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினா்.

Advertisement

Advertisement

இதற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் தங்கதுரை, துணை முதல்வா்கள் மாதவன், கிரிஜாபாய் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments