சிறப்புக் கட்டுரைகள்

கருணாநிதி நூற்றாண்டு விழா: கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள்

அண்ணா வழியில் கருணாநிதியும் தமிழ்ப் பயிற்றுமொழிக் கொள்கையில் உறுதியானவர்.  தமிழில் பயிலும் மாணவர்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கவும் அவர் ஆணை பிறப்பித்தார்.

தினமணி


தமிழுக்காகவும், தமிழகத்துக்காகவும் கருணாநிதியும் திமுகவும் ஆற்றிய தொண்டுகள் ஏராளம்.  

1965 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீக்குளித்தவர்கள்,  காவலர்களின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களிலும் பெரும்பாலானோர் திமுகவினர்.

 *அண்ணா வழியில் கருணாநிதியும் தமிழ்ப் பயிற்றுமொழிக் கொள்கையில் உறுதியானவர்.  தமிழில் பயிலும் மாணவர்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கவும் அவர் ஆணை பிறப்பித்தார். 1996 ஆம் ஆண்டு கருணாநிதி மீண்டும் முதலமைச்சரானபோது, மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும் தமிழைப் பாடமொழியாக்குவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது.

*அனைத்துப் பள்ளிகளிலும் 1 ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்புவரை தமிழை ஒரு பாடமாகக் கட்டாயமாகக் கற்பிக்க வேண்டும் என்று சட்டத்தையும் நிறைவேற்றினார்.

*2010-11 ஆம் ஆண்டு அண்ணா தொழிற்நுட்ப பல்கலைக் கழகங்களில் கட்டுமானவியல், இயந்திரவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் தமிழ்மொழி வழியாகக் கல்வி கற்க வகைச் செய்து, இந்தியாவிலேயே முதன்முறையாகத் தாய்மொழியில் கற்க ஆணையிடப்பட்டது.  தமிழகத்தில் இன்றுஅனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் கற்பிக்கப்படுவதற்குக் கருணாநிதியே காரணம்.

*தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகள் அனைத்திலும் பிற மாநில மாணவர்களும், வெளிநாட்டு மாணவர்களும் தமிழை ஒரு பாடமாகப் படித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இனி, தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காமல் பட்டம் பெறும் பேச்சுக்கே இடமில்லை. இதை நிறைவேற்றியவர் கருணாநிதி.

*திருக்குறளை திருமண அழைப்பிதழ் முதல் அரசுப் பேருந்துகள், அலுவலங்கள் என அனைத்து இடங்களிலும், ஒவ்வொரு தமிழரின் உள்ளங்களிலும் கொண்டு சேர்த்ததில் கருணாநிதிக்கு முக்கிய பங்குண்டு.

*கருணாநிதி கவிதைகள் இயற்றியதுடன், கவியரங்கங்களுக்கும் தலைமை தாங்கி நடத்தியுள்ளார். அறிஞர் அண்ணா மறைந்தபோது, “பூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்-அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம்” எனத் தொடங்கும் கலைஞர் பாடிய இரங்கற்பா, தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறப்பான ஓர் இடத்தைப் பெற்றுள்ளது.

*தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளித்து ஆணை பிறப்பித்தார்.

*வழக்குமன்ற மொழியாகத் தமிழ்மொழியே இருக்கவேண்டும் என்பதுதான் அண்ணாவின் கொள்கை.  இதை செயல்படுத்தியவர் கருணாநிதி.

* தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் 20 விழுக்காடு இடங்கள் ஒதுக்க உத்தரவிட்டவர் கருணாநிதி.

*அண்ணா வழியில், கருணாநிதியும் தமிழை நடுவண் அரசின் ஆட்சி மொழியாக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தினார்.

*தமிழைச் செம்மொழியாக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு அறிவிப்பு.  இதற்கு முழு முயற்சி எடுத்தவர் கருணாநிதி.

*தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறைக்காக ஒரு தனி அமைச்சகத்தை உருவாக்கியவர்.

*1974 ஆம் ஆண்டு அன்றைய கழக அரசில் “செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தை நிறுவினார்.
*சென்னைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக அஞ்சல் வழியில் தமிழ்க் கல்வியை நிறுவி,  வெளிநாடுகளிலும் கல்வி மையங்களை ஏற்படுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT