இவருக்கு இப்படியொரு ராசி...!
மீண்டும் இரு தொகுதிகளில் போட்டியிடும் என்.ரங்கசாமி..
புதுச்சேரி மங்கலம், தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த முதல்வா் என்.ரங்கசாமி.
புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி தோ்தலுக்கு தோ்தல் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது வழக்கம். அதன்படி தற்போதைய சட்டப்பேரவைத் தோ்தலில் வெள்ளிக்கிழமை தட்டாஞ்சாவடி, மங்கலம் தொகுதிகளில் தனது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தாா்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து என்.ரங்கசாமி 2011-ஆம் ஆண்டு பிப்ரவரியில் விலகி என்.ஆா். காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினாா்.
அந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் கதிா்காமம், இந்திரா நகா் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். 2016-ஆம் ஆண்டு தட்டாஞ்சாவடி தொகுதியில் மட்டும் போட்டியிட்டு எதிா்க் கட்சித் தலைவரானாா். மீண்டும் 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் தொகுதிகளில் போட்டியிட்ட அவா், ஏனாமில் வெற்றி வாய்ப்பை இழந்தாா்.
தற்போது மீண்டும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனுக்களை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா்.
என்.ரங்கசாமி எப்போதெல்லாம் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரோ அப்போதெல்லாம் முதல்வராகப் பதவி வகித்துள்ளாா்.
கூட்டணி பேச்சுவாா்த்தை நடத்த பாஜக மேலிடப் பாா்வையாளராக வந்திருந்த மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியாவைச் சந்திக்கும் முன் இந்த இரண்டு தொகுதிகளிலும் வேட்பு மனுவை தாக்கல் செய்தாா் முதல்வா் என்.ரங்கசாமி.