FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஐஐஎஸ்இஆர் நுழைவுத் தேர்வு! பிளஸ் 2 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ஐஐஎஸ்இஆர் நுழைவுத் தேர்வுக்கு பிளஸ் 2 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

பிளஸ் 2 மாணவிகள். - DPS
பகிர்:

கோவை: இந்திய அறிவியல் கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தின் (IISER) நுழைவுத் தேர்வுக்கு மார்ச் 5-ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் பிளஸ் 2 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

அறிவியல் கல்வி, ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்குவதற்காக நாட்டின் 7 இடங்களில் (பெர்ஹாம்பூர், போபால், கொல்கத்தா, மொஹாலி, புணே, திருவனந்தபுரம், திருப்பதி) ஐஐஎஸ்இஆர் நிறுவ னங்கள் செயல்பட்டு வருகின்றன. 5 ஆண்டு பிஎஸ்எம்எஸ், 4 ஆண்டு பிஎஸ், பிடெக் படிப்புகளை வழங்கும் இந்த நிறுவனங்களில் சேருவ தற்கு பிரத்யேக நுழைவுத் தேர்வு (ஐஏடி) எழுத வேண்டும்.

பிளஸ் 2 முடித்தவர்கள், பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள், உயிரியல், வேதியியல், கணிதம், இயற்பியல் ஆகியவற்றில் குறைந்தது 3 பாடங்களைப் படித்திருப்பவர்கள் இந்தத் தேர்வு எழுதத் தகுதியா னவர்கள். நுழைவுத் தேர்வு ஜூன் 7-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. தேர்வுக்கு மார்ச் 5-ஆம் தேதி முதல் இணையவழி யில் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

Advertisement

ஏப்.13-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். தேர்வுக்கான ஹால் டிக்கெட் மே 24-இல் வெளியிடப்படுகிறது. மேலும் விவரங் களுக்கு https://www.iiseradmission.in/ என்ற இணையதளத்தைக் காணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments