ஐஐஎஸ்இஆர் நுழைவுத் தேர்வு! பிளஸ் 2 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!
ஐஐஎஸ்இஆர் நுழைவுத் தேர்வுக்கு பிளஸ் 2 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!
செய்திகள் / கட்டுரைகள்ஐஐஎஸ்இஆர் நுழைவுத் தேர்வு! பிளஸ் 2 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!
ஐஐஎஸ்இஆர் நுழைவுத் தேர்வுக்கு பிளஸ் 2 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!
கோவை: இந்திய அறிவியல் கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தின் (IISER) நுழைவுத் தேர்வுக்கு மார்ச் 5-ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் பிளஸ் 2 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
அறிவியல் கல்வி, ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்குவதற்காக நாட்டின் 7 இடங்களில் (பெர்ஹாம்பூர், போபால், கொல்கத்தா, மொஹாலி, புணே, திருவனந்தபுரம், திருப்பதி) ஐஐஎஸ்இஆர் நிறுவ னங்கள் செயல்பட்டு வருகின்றன. 5 ஆண்டு பிஎஸ்எம்எஸ், 4 ஆண்டு பிஎஸ், பிடெக் படிப்புகளை வழங்கும் இந்த நிறுவனங்களில் சேருவ தற்கு பிரத்யேக நுழைவுத் தேர்வு (ஐஏடி) எழுத வேண்டும்.
பிளஸ் 2 முடித்தவர்கள், பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள், உயிரியல், வேதியியல், கணிதம், இயற்பியல் ஆகியவற்றில் குறைந்தது 3 பாடங்களைப் படித்திருப்பவர்கள் இந்தத் தேர்வு எழுதத் தகுதியா னவர்கள். நுழைவுத் தேர்வு ஜூன் 7-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. தேர்வுக்கு மார்ச் 5-ஆம் தேதி முதல் இணையவழி யில் விண்ணப்பிக்கலாம்.
ஏப்.13-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். தேர்வுக்கான ஹால் டிக்கெட் மே 24-இல் வெளியிடப்படுகிறது. மேலும் விவரங் களுக்கு https://www.iiseradmission.in/ என்ற இணையதளத்தைக் காணலாம்.