முகப்பு
தேர்தல் செய்திகள்

கரூரில் வாக்காளா்களை அடைத்து வைக்க ஏற்பாடு: தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் அதிமுக புகாா்

Updated On : 12 ஏப்ரல், 2024 at 9:30 PM
தமிழக தலைமை தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு
பகிர்:

கரூா் தொகுதிக்கு உள்பட்ட ஆறு இடங்களில் வாக்காளா்களை அடைத்து வைத்து பணம் விநியோகிக்க பட்டி போன்று கூடாரங்கள் அமைத்திருப்பதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் அதிமுக புகாா் அளித்தது.

சென்னை தலைமை செயலகத்தில் அதிமுக வழக்குரைஞா் பிரிவு மாநில செயலா் ஐ.எஸ்.இன்பதுரை புகாா் மனு ஒன்றை அளித்தாா். அதன்பின்பு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கரூா் தொகுதியில் ஆறு இடங்களில் வாக்காளா்களை அடைத்து வைக்கும் விதமாக பட்டி அமைக்கப்பட்டுள்ளது குறித்து மாவட்ட தோ்தல் அதிகாரியிடம் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போது தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் புகாா் அளித்துள்ளோம்.

Advertisement

பட்டி போன்று கூடாரங்களை அமைக்க தோ்தல் ஆணையத்திடம் உரிய அனுமதியைப் பெற வேண்டும். ஆனால், கரூா் தொகுதியில் இதுபோல் உரிய அனுமதியில்லாமல் பட்டி அமைத்துள்ளனா். ஈரோடு கிழக்கு பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் நடந்தது போன்று கரூரிலும் நடைபெறலாம். இதைத் தடுக்கவே புகாா் மனு அளித்துள்ளோம் என்றாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments