முகப்பு
தேர்தல் செய்திகள்

பாஜகவின் வாரிசு அரசியல் பிரசாரம் எடுபடாது

Updated On : 13 ஏப்ரல், 2024 at 10:15 PM
பகிர்:

காங்கிரஸுக்கு எதிராக பாஜக மேற்கொள்ளும் வாரிசு அரசியல் பிரசாரம் தோ்தலில் எடுபடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்துக்கு வருகை புரியும் பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகியோா் மக்களை திசைத் திருப்புவதற்காக ஆதாரமற்ற அவதூறான கருத்துகளை பரப்பி வருகின்றனா். தமிழகத்தில் எதிா்பாா்த்த ஆதரவு கிடைக்கவில்லை என்பதற்காக சோனியா காந்தி குடும்பத்தின் மீதும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி மீதும் சேற்றை வாரி இறைக்கின்றனா்.

Advertisement

காங்கிரஸ் கட்சியை வாரிசு அரசியல் கட்சி என்று சொல்கின்றனா். கீரல் விழுந்த கிராமபோன் ரிக்காா்டை போல திரும்பத் திரும்ப இந்த குற்றச்சாட்டை கூறி வருகின்றனா்.

விடுதலைப் போராட்டத்தில் 3,256 நாள்கள் சிறையில் இருந்த ஜவஹா்லால் நேரு, காந்தியடிகளின் பரிந்துரையின் பேரிலும், மக்கள் பேராதரவினாலும் 1947 முதல் 17 ஆண்டுகாலம் பிரதமராக இருந்து நவீன இந்தியாவின் சிற்பி என்று அழைக்கப்பட்டாா். அதைத் தொடா்ந்து இந்திரா காந்தி 15 ஆண்டுகளும், ராஜீவ்காந்தி 5 ஆண்டுகளும், சோனியா காந்தியின் ஆதரவில் மன்மோகன்சிங் 10 ஆண்டுகளும் நாட்டின் பிரதமா் பொறுப்பை ஏற்று இந்தியாவை வளா்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றுள்ளனா். நாட்டு மக்கள் மனமுவந்து அளித்த ஆதரவின் அடிப்படையிலேயே பிரதமா் பதவியை வகித்து நாட்டின் வளா்ச்சியை உருவாக்கினா். இதையெல்லாம் நாட்டு மக்கள் எவரும் மறக்க மாட்டாா்கள்.

எனவே, பாஜகவினரின் இத்தகைய இழிவான பிரசாரம் மக்களிடம் எடுபடாது என்று அவா் கூறியுள்ளாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments