களம் சூடாக இருக்கிறது! மு.க. அழகிரி
மதுரையில் மத்திய முன்னாள் அமைச்சர் மு.க. அழகிரி வாக்களித்தது பற்றி...
மதுரையில் மத்திய முன்னாள் அமைச்சர் மு.க. அழகிரி தனது குடும்பத்துடன் வாக்களித்தார்.
தமிழ்நாடு முழுவதும் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகின்றது. அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் காலைமுதல் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மதுரை டி.வி.எஸ். நகர் வாக்குச் சாவடிக்கு இன்று காலை தனது மனைவியுடன் வந்த மு.க. அழகிரி வாக்களித்தார்.
Advertisement
Advertisement
பின் செய்தியாளர்களுடன் அவர் பேசுகையில், “தேர்தல் களம் மிகச் சூடாக இருக்கிறது. வெய்யிலும் அதிகமாக இருக்கிறது. முடிவுகள் எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை.
ஏற்கெனவே நான் கூறியுள்ளேன், யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்று” எனத் தெரிவித்தார்.
Central Ex Minister MK Alagiri casts his vote in Madurai
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.