ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு- வன்னி அரசு
ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஆட்சியிலும் பங்கு
அதிகாரத்திலும் பங்கு
Advertisement
Advertisement
இது திருமா காலம்-இனி
உயர்வோம் மேலும் மேலும்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தவெக அமைச்சரவையில் பங்கேற்கும் எனத் தகவல் தெரிய வந்துள்ளது. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கிய கொள்கை முழக்கங்களில் ஒன்றாகும்.
நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் முழு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 108 இடங்களில் வென்ற விஜய், காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக ஆகியவற்றிடம் ஆதரவு கோரினார். இந்த கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ளன. இதையடுத்து தவெகவின் பலம் 118 எம்எல்ஏக்களாக உயர்ந்துள்ளது.
தவெகவுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி ஆதரவு தெரிப்பதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன. பெரும்பான்மைக்கான சிக்கல் தீர்ந்த நிலையில் பனையூர் அலுவலகம் அருகே குவிந்த தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே ஆட்சி அமைக்க அழைக்கும்படி ஆளுநரிடம் 3-வது முறையாக விஜய் இன்று உரிமை கோரியுள்ளார்.
VCK Deputy General Secretary Vanni Arasu has stated, A share in the government and a share in power.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.