முகப்பு
தமிழ்நாடு

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு- வன்னியரசு

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.

வன்னியரசு
பகிர்:

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஆட்சியிலும் பங்கு

அதிகாரத்திலும் பங்கு

Advertisement

இது திருமா காலம்-இனி

உயர்வோம் மேலும் மேலும்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தவெக அமைச்சரவையில் பங்கேற்கும் எனத் தகவல் தெரிய வந்துள்ளது. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கிய கொள்கை முழக்கங்களில் ஒன்றாகும்.

நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் முழு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 108 இடங்களில் வென்ற விஜய், காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக ஆகியவற்றிடம் ஆதரவு கோரினார். இந்த கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ளன. இதையடுத்து தவெகவின் பலம் 118 எம்எல்ஏக்களாக உயர்ந்துள்ளது.

தவெகவுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி ஆதரவு தெரிப்பதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன. பெரும்பான்மைக்கான சிக்கல் தீர்ந்த நிலையில் பனையூர் அலுவலகம் அருகே குவிந்த தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே ஆட்சி அமைக்க அழைக்கும்படி ஆளுநரிடம் 3-வது முறையாக விஜய் இன்று உரிமை கோரியுள்ளார்.

summary

VCK Deputy General Secretary Vanni Arasu has stated, A share in the government and a share in power.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.