அமைச்சர்கள் வன்னி அரசு, ஷாஜகானுக்கு துறை ஒதுக்கீடு!
அமைச்சர்கள் வன்னி அரசு, ஷாஜகானுக்கு துறை ஒதுக்கீடு பற்றி...
தமிழ்நாட்டின் அமைச்சர்களாக பதவியேற்ற வன்னி அரசு மற்றும் ஏ.எம். ஷாஜகானுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட துறைகள் விவரங்களை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முதல்வராக ஜோசப் சி. விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் மே 10 ஆம் தேதியும், காங்கிரஸின் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 23 பேர் அமைச்சர்களாக மே 21 ஆம் தேதியும் பதவியேற்றனர்.
அவர்களுக்கான துறைகள் ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆளுநரும் ஒப்புதல் அளித்திருந்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், விசிகவின் வன்னி அரசும், ஐயூஎம்எல் கட்சியின் ஷாஜகானும் இன்று காலை அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். தமிழ்நாடு முதல்வர் விஜய் முன்னிலையில் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இதனைத் தொடர்ந்து, வன்னி அரசுக்கு சமூக நீதித் துறையும், ஷாஜகானுக்கு சிறுபான்மையினர் நலத் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Portfolios Allocated to Ministers Vanni Arasu and Shahjahan!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.